என் எழுத்தின் பல்வேறு பரிமாணங்களை அதன் அனைத்து விதமான பார்வைகளோடு கொண்டாடும் ரசனை கொண்ட என் வாசகனிடம் இதைப் பகிர்ந்தால் ஒரு நீண்ட ஆசுவாசம் கிடைக்கும் என்று நினைத்து, அந்தக் காட்சிப் புலன்களை எழுத்துப் படிமங்களாக மாற்றி முன்வைத்திருக்கிறேன்.
'Come! Come voyage in dream, beyond the known, beyond the possible!'
என்று சொல்லும் ஸிம்பலிசக் கவிஞனான பெளதலேர் போல இந்த கதையில் வடிவமைத்து வைத்திருக்கும் மூன்று காதல் பாடல்களை யாராலும் கற்பனை செய்ய முடியாத, சாத்தியமானவற்றிற்கும் அப்பாலான தளத்தில் நின்று வடிவமைத்திருக்கிறேன்..
என் எழுத்தைப் பின்தொடரும் தீவிர வாசகனுக்கு மட்டுமே அந்தக் காட்சிகள் புலனாகும்.. அவனுக்காகத்தான் இந்த ஆலா பூ..
Be the first to rate this book.