போலந்து நாட்டின் விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா, பாகிஸ்தானின் கிஸ்வர் நஹீத், லெபனான் நாட்டின் ஜுமானா ஹத்தாத் இந்தியாவில் பிறந்து ஜெர்மனியில் வாழும் சுஜாதா பட் வங்கதேசத்தைச் சேர்ந்த தஸ்லீமா நஸ்ரின், நோபல் பரிசு பெற்ற ஆப்ரிக்க-அமெரிக்கரான போனி மோரிசன், சிலிநாட்டின் எவ்ஜனியா மரியோ பிரேவா என ஏழு உலகப் பெண்கவிகளின் கவிதைகள்; இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ளன. ஐரோப்பா ஆசியா ஆப்ரிக்கா-இலத்தீனமெரிக்கா என நான்கு கண்டங்கள், கிறித்துவம்-இஸ்லாம்-இந்து என மூன்று மதங்கள் சார்ந்த பெண் பிரக்ஞையை முன்னிறுத்தும் கவிதைகள் இவை. ஆண்மைய உலகும், போரின் அழிவும், தாய்மையின் கனிவும் குறித்தன இக்கவிதைகள், கம்யூனிசம், முதலாளியம், தேசியவிடுதலைச் சமூகங்கள் என இவற்றுள் வாழ்ந்த பெண்கள் இவர்கள். சமகால உலகு தழுவி நம் காலத்தில் வாழும் பெண்களின் முழுமையான அனுபவங்களை வெளிப்படுத்தும் உரத்த குரல்கள் இத்தொகுப்பின் கவிதைகள்.
Be the first to rate this book.