69 பற்றி ‘காகத்தின் கலவிநிலை' என வாத்ஸாயனர் சொல்கிறார், கீழ்மைச்செயல் என்ற தொனியில். கழிவுறுப்பில் இன்பம் ஊற்றெடுப்பது போல் கீழ்மையிலிருந்துதான் கலை முளைத்தெழுகிறது. இந்நூலை அத்திசையில் வைக்கலாம். துல்லியமாய் 100 சொல்லில் அடைத்த 69 நுண்கதைகள் இவை; ஒரு வாரத்தில் எழுதப்பட்டவை. பாலின முரண்களை, உறவுச் சிடுக்குகளை, கலாசார மீறல்களை, இச்சையின் அரசியலைப் பிரதிபலிக்கும் இக்கதைகளில் விதவிதமான, வினோதமான ஆண்களும் பெண்டிரும் உலவுகிறார்கள். மாவிலிருந்து மது நொதிப்பது போல் அவர்களுக்குள் காதலிலிருந்து காமம் கசிகிறது. அவற்றில் எது நீங்கள், எது நான் என ரகசிய அடையாளங் காண்பது சுவாரஸ்ய ஆட்டம்.
Be the first to rate this book.