ஜார்ஜ் ஆர்வெல் பிரச்சார இலக்கியத்திலே சிறிதும் நம்பிக்கையற்றவர். ஒரு தலைமுறையின மனசாட்சி என்று வேண்டுமானால் அவரைச் சொல்லலாம். அந்த மனசாட்சி வேகம் காரணமாகவே எழுத முடிந்தது. தனக்கென்று ஆத்மீகமாக ஏற்பட்ட ஒரு பிரச்சனைக்குக் கலை உருவம் கொடுக்க முற்பட்ட ஆர்வெல் மிகவும் அழகான விலங்குப் பண்ணையையும், மிகவும் பயங்கரமான 1984ஐயும் சிருஷ்டித்துவிட்டார்.
வெறும் அரசியல் பிரச்சாரமாக மட்டும் 1984 என்கிற இந்தநாவலைக் கருதுவது தவறு ஏனென்றால் விலங்குப் பண்ணையில் உள்ளது போலவே இதிலும் ஜார்ஜ் ஆர்வெல் நித்தியமான பல அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு கதையையும் கதைக் கருத்தையும் நடத்திச் சென்றிருக்கிறார். லோகாயத காரணங்களால் பொய்களும் பல சமயங்களில் பல சந்தர்ப்பங்களில் மெய்போலுமே என்று தத்துவதரிசிகள் உலகம் பிறந்த நாள் முதல் வற்புறுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால், இருபதாம் நூற்றாண்டில் அரசியல் பூரணத்துவம் ஏற்பட்டு மெய்போலுமே என்பது தவறு' பொய்யேதான் மெய் என்று ஸ்தாபிக்கவும் மனிதர்களை ஏற்றுக்கொள்ளச் செய்யவும் துணிந்து விட்டது. இந்த துணிச்சலின்பயங்கர உருவத்தையும் விளைவுகளையும் 1984ல வாசகர்கள் காணலாம்.
-க.நா.சு
Be the first to rate this book.