தாய்க்குரிய அன்பு, தந்தைக்குரிய கண்டிப்பு, நண்பனுக்குரிய உரிமையுடன் பழகி பதின்ம வயதினரின் தன்னம்பிக்கையை மேம்படுத்தி, அவர்களுக்குள் உறைந்து கிடக்கும் ஆற்றலை வெளிக் கொண்டுவரும் பெரும்பொறுப்பு இரண்டாம் பெற்றோர்களான ஆசிரியர்களுக்கு உண்டு.
இச்சமூகத்தின் பெரும் மக்கள் தொகையாக நிரம்பிக்கிடக்கும் இந்த வளரிளம் பருவத்தினரின், எதிர்கால வாழ்விற்கான அஸ்திவாரத்தைக் கட்டமைப்பதில் பெற்றோரும், ஆசிரியரும் இணைந்தே பயணிக்க வேண்டி, செம்மார்ந்த அறிவுடன் பறக்கத் துடிக்கும் அந்த இளந்தளிர்களின் சிறகுகளுக்கு சுமையை கூட்டாமல், வழிகாட்டினால் போதும். பறக்கட்டும் பறக்கட்டும் நம் பட்டாம்பூச்சிகள்… என பல புதிய உத்திகளை வழங்குகிறார் நூலாசிரியர்.
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியையாகப் பணியாற்றும் முனைவர் ரமாதேவி இரத்தினசாமி, ஐ.நா., யுனெஸ்கோ, யூனிசெஃப், உலக வங்கி, ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புகள் நடத்திய கருத்தரங்குகளில் மகளிர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துப் பல்வேறு நாடுகளுக்குச் சென்று உரை நிகழ்த்தியுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பின் தலைவர், சார்க் மகளிர் வலையமைப்பின் திட்டக்குழு உறுப்பினர், பெல்ஜியம் உலகக் கல்வி அமைப்பின் உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் பொறுப்புகள் வகிக்கிறார்.
Be the first to rate this book.