பல்வேறுபட்ட கதைகளின் இத்தரமான தொகுப்பு, உங்கள் அன்றாடக் கடமைகளிலிருந்து உங்களை விடுவித்து, உங்களுக்குத் தேவையான கவனத்தையும், ஆற்றலையும் அர்த்தத்தையும் அளிக்கவல்லது.
கதைகளும், எடுத்துக்காட்டுகளுமே எப்போதும் நம்மை ஊக்கப்படுத்தும் உன்னத முறைகளாகும். புகழ்பெற்ற எழுத்தாளரான ஜி. பிரான்சிஸ் சேவியரின் எழுச்சியூட்டும் மிகப்பல நூல்களில் இந்நூலும் ஒன்று. பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்தும், தாம் கற்ற பல நூல்களிலிருந்தும் இவர் பெற்ற அறிவுக்கொடையை நமக்கு ஒரு பொக்கிஷமாகத் தொகுத்தளித்துள்ளார்.
நிரம்பிவழியும் அரங்குகள் நிறைந்த சுயமுன்னேற்றம் குறித்த இவரது பயிற்சி நிகழ்ச்சிகளின் அனுபவங்களிலிருந்து, உரையாடல் பாணியில் இவர் தொகுத்தளித்துள்ள படைப்புகள், படிப்பவர், தத்தம் கேள்விகளுக்கான விடைகளை அறிந்துகொள்ள உதவும் அற்புதப் படைப்புகளாகும். இத்தகைய முயற்சி மிகவும் புதிய அணுகுமுறை ஆகும்.
எதிர்மறையாக யோசிப்பவர்களையும், வாழ்க்கைக்குப் பயனற்ற படைப்புகளைப் படிப்பவரையும் தவிர, மற்றவர் யாவருக்கும், இத்தொகுதி மிகவும் ரசிக்கத் தக்கதாகவே அமையும். குறிப்பாக, இந்நூல், பிரச்சாரம் செய்பவர்களுக்கும், உரையாற்றுபவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். ஏனென்றால், உணர்வூட்டும் விதமாகவும், தொடர்ச்சியான நகைச்சுவையையும் கொண்ட கதைகளின் தொகுப்பாய் இந்நூல் அமைந்திருப்பதே அதற்குக் காரணம் ஆகும்.
Be the first to rate this book.